
இஸ்லாம் - மார்க்கத்தில் நிர்பந்தமே இல்லை. (2:256) விரும்பினோர் ஏற்கட்டும்.விரும்பாதோர் நிராகரிக்கட்டும் (18:29) என்று இறைவன் கூறுகின்றான்.
நீர் நளினமாகவும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உம் இறைவனின்வழியின்பால் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டல்) நீர்(கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்வீராக! அவனுடையவழியிலிருந்து தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக உம் இறைவன்நன்கறிவான். நேரான வழியிலிப்போர் யார் என்பதையும் அவன் தான்நன்கறிவான். (16:125)
விசுவாசிகளே!) நீங்கள் வேதமுடையோர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்)அழகான முறையிலன்றி (அவர்களுடன்) தர்க்கிக்க வேண்டாம். ஆயினும்அவர்களில் எவரேனும் வரம்பு மீறிவிட்டால் (அதற்கு தக்கவாறு நீங்கள் பதில்கூறுவது உங்கள் மீது குற்றமாகாது.
அவர்களுடன் தர்க்கித்தால்) எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்) தையும்உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்) தையும் நாங்கள் விசுவாசிக்கின்றோம்.எங்கள் ஆண்டவனும் உங்கள் ஆண்டவனும் ஒருவனே! நாங்கள்அவனுக்குத்தான் முற்றிலும் வழிபட்டு நடக்கின்றோம் என்று கூறுவீர்களாக(29:46) என்று குர்ஆன் உபதேசிக்கின்றது.
இஸ்லாத்தை பரப்புவதில் அமைதிக்கு இவ்வளவு முக்கியத்துவமும்,முதன்மையும் தருகின்ற போது அமைதியை இவ்வளவு தூரம் வலியுறுத்திடும்போது முஹம்மது (ஸல்) அவர்கள் ஏன். சில போர்களிலே ஈடுபட்டார்கள் எனகேட்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் எடுத்து வைத்த உண்மையை, அமைதியானஅறிவுப்பூர்வமான வாதத்தை ஏற்று மக்கள் சிறுகசிறுக இஸ்லாத்தின் பால்இணைந்தனர். மதத்தின் பெயரால் மக்களை ஏய்த்து பிழைப்பு,நடத்தியவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் போதித்த இஸ்லாம் எதிராகப்பட்டது.அதனால் எதிர்க்க முற்பட்டனர். எதிர்ப்பின் உச்சத்தில் முஹம்மது (ஸல்)அவர்களை கொலை செய்வது என முடிவ செய்தனர். இதனையறிந்த நப(ஸல்)அவர்கள் தங்கள் தாயகம் துறந்து யாத்ரிப் (மதீனா) சென்று குடியேறினார்கள்.அங்குள்ளோர் அநேகர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபடியால் அங்கே ஒருஇஸ்லாமிய அரசாங்கம் அமைக்கப்பட்ட ஆட்சி செய்து வந்தார்கள்.
மதீனாவில் அமைதி நிலவினாலும், மக்காவின் எதிரிகள் ஒயவில்லை.முஸ்லிம்கள் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பு வளர்ந்தது.இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் ஒழித்திட அவர்கள் திட்டங்களை தீட்டியவண்ணமிருந்தனர். முஸ்லிம்களுக்கு முடிந்தவரை தொல்லை தருவதில்முனைப்புக் காட்டினார்கள். இறுதியில் முஸ்லிம்களை அழித்தொழிக்கபடைதிரட்டி போர் தொடுக்க வந்தனர். ஒட்டுமொத்தமாக அழிந்துப் போவதைதவிர வேறு வழியில்லை என்ற நிலை வந்தபோது முஸ்லிம்கள் தங்களைதற்காத்துக் கொள்ள அவர்களை எதிர்த்து போர்புரிய வேண்டி வந்தது.உதாரணத்திற்கு நபி(ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் சந்தித்த முதல் போரைஎடுத்துக் கொள்ளுங்கள். முதல் போர் நடந்த பத்ரு என்னும் இடமானதுமுஸ்லிம்கள் வாழும் மதீனாவிலிருந்து 80 மைல் தொலைவிலும். எதிரிகள்வாழ்ந்த மக்காவிலிருந்து 200 மைல் தொலைவிலும் உள்ளது. இரண்டாவதுபோரான உஹது போர் நடந்த உஹது என்னும் இடமானது மதீனாவிலிருந்து 5மைல் தொலைவிலும், மக்காவிலிருந்து 300 மைல் தொலைவிலும் உள்ளது.இதிலிருந்து முதலில் வலிய போருக்கு வந்தத யாரென விளங்கியிருக்கும்.முஸ்லிம்களை கொன்றொழிக்க எதிரிகள் நூற்றுக்கணக்கானமைல்களுக்கப்பாலிலிருந்து பெரும்படையுடன் வரும் போது அவர்களைஎதிர்கொள்ள மதீனாவை விட்டு வெளிவந்து எதிர்கொண்டார்கள். இதுபோலவேபல போர்களும் தற்காப்புக்காக நடத்தப்பட்ட போர்களேயாகும்.
எனினும் ஒரு சில போர்கள் வலிய செய்தவைகளும் உண்டு. ஏனென்றால்இஸ்லாம் முஸ்லிம்களை நன்மையை ஏவவும், தீமையை தடுக்கவும்,அமைதியை நிலைநாட்டவும், அமுக்ககப்பட்டோருக்கு உதவி செய்திடவம்,அடிமைப்பட்டு கிடப்பவர்களை விடுவிக்கவும் பணித்துள்ளது. அவ்வித்தில் ஒருநாட்டு மக்கள் அல்லது ஒரு சமூகத்தவர்களுக்கு அந்த அரசு அநீதிஇழைக்குமானால் அவர்களை காப்பதற்காக அந்நாட்டின் மீது போர் தொடுக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
'பலஹீனமாக ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும்பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்ககாரணம் யாது? (அவர்களோ) 'எங்கள் இறைவனே அக்கிரமக்காரர்கள் இருக்கும்இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக. எங்களுக்காகஉன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக. இன்னும்எங்களுக்காக உன்னிடமிருந்து ஒர் உதவியாளனையும் அளித்தருள்வாயாகஎன்று பிரார்த்தனை செய்கிறார்கள் (4:75)
என்று இறைவன் கூறியதால் அமைதியையும். சமூக நீதியையும் நோக்கமாகக்கொண்டு அத்தகைய போர்களைச் செய்தார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள்செய்த போர்கள் எதுவும் அரசியல், பொருளாதார ஆதாயத்திற்காகவோ, தேசிய,இன மொழி உணர்வுகளை காட்டக் கூடியதாகவே இருக்கவில்லை.
ஆனால் இஸ்லாம் தந்த உற்சாகத்ததால் முஸ்லிம்கள் தங்களால் முடிந்தவரை வாளால் மதம் பரப்பினார்கள். முஸ்லிம் மதவெறிக் கூட்டம் உருவியவாளை ஏந்திய வண்ணம் அல்லாஹ் அக்பர் என்று முழுங்கியவண்ணம்கண்ணில் கண்டவர்களையெல்லாம் லாஇலாஹ இல்லல்லாஹு சொல்இல்லையென்றால் உன் தலை கொய்யப்படும் என்று கர்ஜிப்பது போல் ஒருகோர சித்திரம் கூட ஒரு சில வரலாற்றாசிரியர்களால் தீட்டிவைக்கப்பட்டது.
முஸ்லிம்கள் வாளால் மதம் பரப்பினார்கள் என்றால் தங்கள் ஆட்சிக்குட்பட்டபகுதிகளில் இறைநிராகரிப்பவர்களை வாழ விட்டிருப்பார்களா? ஆனால்முஸ்லிம்கள் ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முஸ்லிமல்லாதவர்கள்தங்கள் மத உரிமைகளைப் பேணி வாழ்ந்திருக்கின்றார்களே.
உலக வரலாற்றிலே இஸ்லாத்தை எதிர்த்தவர்களில் முக்கிய இடம்வகித்தவர்கள் தாத்தாரிகயார்கள் ஆவார்கள். அவர்களோ இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு பின் இஸ்லாத்தின் காவலர்களாக மாறியதை சரித்திரம் அறியும்.
முஸ்லிம்களை படையெடுத்துச் செல்லாத இந்தோனிஷியா, மலேசியாபோன்ற நாடுகளிலுள்ள மிகப்பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள் ஆவார்கள்.வல்லரசான அமெரிக்காவில் தற்போது அதிவேகமாக இஸ்லாம்பரவிவருகிறதே. இது எதனால் ஏற்பட்ட வளர்ச்சி?
நீண்ட நெடுங்காலம் முஸ்லிம்கள் அரபு நாட்டை ஆண்டு வருகின்றார்கள்.அரபு நாட்டிலுள்ள யூதர்களும், கிறிஸ்தவர்களும் வாளுக்கு பயந்தஇஸ்லாத்தை ஏற்றார்கள் என்றால் - பிரிட்டீஷ், பிரஞ்ச் ஆதிக்கத்தின் போதுமுந்தைய மதங்களுக்கு திரும்பியிருக்க வேண்டுமே. அப்படி ஒருவராவதுதிரும்பியிருக்கின்றார்களா?
800 ஆண்டுகள் ஸ்பெயினை ஆண்ட முஸ்லிம்கள் அங்குள்ள மக்களை மதம்மாற நிர்பந்தித்ததே இல்லை. ஆனால் பின் வந்த சிலுவைப் போராழிகள்முஸ்லிம்களை ஸ்பெயினை விட்டே துரத்தி துடைத்தார்கள். பாங்கு கூற ஒருமுஸ்லிம் கூட இல்லாத நிலைமைய ஏற்படுத்தினார்கள்.
இந்தியாவிற்குள் முஸ்லிம்கள் படையெடுத்து வருவதற்குள கேரளக்கடற்கரை வழியாக இஸ்லாம் இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டதே.முகலாயர்கள் இந்தியாவின் மீது படையெடுத்தார்கள் என்றால் இஸ்லாத்தைபரப்பிடுவதற்காக அல்ல. அந்த போர்களுக்கும், இஸ்லாத்திற்கும் எந்ததொடர்பும் இருந்ததில்லை. நாடு பிடிப்பது என்பது அந்த காலத்தது அரசுநெறியாக இருந்தது. ஒவ்வொரு வருடமும் விஜயதசமி அன்று ஒவ்வொருஇந்து மன்னனும் மற்ற இந்து அரசிடம் சென்று 'யுதம் தேஹி' என்று கூறுவான்.அதன் பொருள் போருக்கு வா! அல்லது உன் அரசை என்னிடம்ஒப்படைத்துவிடு என்பதாகம். இந்து மன்னர்களான ராஜராஜனும்,ராஜேந்திரனும் ஜாவா. சமத்திரா மற்றும் கீழ்த்திசை நாடுகளின் மீதுபடையெடுத்தார்கள். இன்றைக்கும் அங்கெ இந்துமதத்தின் சுவடுகள்இருக்கின்றன. அப்படியானால் இந்து மதத்தைப் பரப்பிடத்தான் அவர்கள்வாளெடுத்தார்கள் என்று தானே கொள்ளவேண்டும்
'அபொல்லோனியஸ் தியான நகரிலிருந்து பேரொளி வீசிய சூரியன் ஆவார்.மானிடரின் துன்பம் துடைப்பதற்காகவே விண்ணுலகத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட கருணாமூர்த்தி ஆவார் என்று கிரேக்கர்களால்வர்ணிக்கப்பட்டவர். இவர் இயேசுகிறிஸ்து போன்று பல அற்புதங்களைசெய்துள்ளார் என்று அபொல்லோனியஸ் பக்தர்கள் புகர்ந்துரைத்தபோதுசகிக்காத கிறிஸ்தவ சமயவாதிகளின் ஆத்திரமெல்லாம்அபொல்லோனியஸ்ஸின் நினைவச் சின்னங்களின் மீது திரும்பியது. கி.பி. 331-ல் மகா கான்ஸ்டன்டைன் ஒரு பெரும்படையை ஏய்கா நகருக்கு அனுப்பிஅங்க அபொல்லோனியஸ் முதன்முதலில் மருத்துவ நகருக்கு அனுப்பி அங்குஅபொல்லோனியஸ் முதன் முதலில் மருத்துவ சேவை புரிந்து புகழ்பெற்றஅங்கிளிபியஸ் ஆலயத்தை இடித்துத் தரைமட்டமாகச் செய்தான். எபிஸஸ்நகரில் இருந்த அபொல்லோனியஸ் சிலையை உடைத்து தூளாக்கினான். அவர்எழுதிவைத்த யோக தத்துவம் பயிற்சி பற்றிய நான்கு நூற்தொகுப்புகள்இருக்கும் நூல்களையெல்லாம் தேடிப்பிடித்து அப்பிரதிகளையும், மற்றும் அவர்எழுதிய கட்டுரைப் பிரதிகளையையும் ஒட்டுமொத்தமாகத் தீயிட்டு எரித்துவிடஉத்தரவிட்டான். அபொல்லோனியஸ் பற்றி பிறர் எழுதிய நூல்களும் கூடஅழிக்கப்பட்டன.
'மிலான் அரசாணை' (EDICT OF MILAN) – அதாவது கிறிஸ்துவ மதம் சட்டப்படியாகஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு மதமாகும் என்று கூறி பல போர்களை நடத்திபிறமதக் கலாச்சாரங்களை முற்றாக அழித்து கிறிஸ்தவ மதத்தை பரப்பியவர்மகா கானஸ்டன்டைன்.
கிறிஸ்துவ மதத்தை அங்கீகரித்துக் கொண்ட ஐரோப்பியர்கள் அனைத்துவிதஆயுதங்களையும் ஏந்தி வெறி கொண்ட கொள்ளையர்களைப் போல் உலகம்எங்கானும் எல்லா திசைகளிலும் பாய்ந்து சென்றார்கள். சென்றஇடங்களிலெல்லாம் வணிக மண்டிகளை, மூலப் பொருட்களின் குவியல்களi,பதியப் புதிய குடியேற்றங்களை (காலணிகளை) நிர்மாணித்தார்கள். பெரும்பெரும் சாம்ராஜ்ஜியங்களை நிறுவினார்கள். அங்கெல்லாம் கிறிஸ்தவர்கள்பெருகினார்கள். அப்படியானால் கிறிஸ்தவமும் வாளால் பரப்பப்பட்டது தானே.
இஸ்லாத்தைப் பரப்பத்தான் முஸ்லிம்கள் படையெடுத்தார்கள் என்றால்டில்லியை ஆண்ட சுல்தானை எதிர்த்து முகலாய மன்னர் பாபர் வரவேண்டியதுஏன்? பலர் அறியாத உண்மை எதுவென்றால் கஜினி முஹம்மதுவின் முக்கியப்படைத்தளபதியாக இருந்தது 'திலக்' எனப்படும் இந்துதான். அப்போதிருந்ததர்கிஸ்தான் புரட்சியாளர்களை கொடூரமான முறையில் அடக்கியதும்,இந்தியப் படையெடுப்பில் மிகமுக்கியப்பங்கு வகித்தவனும் திலக் தான்.





